Posts

குர்ஆன் பற்றி அறிவோம்...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இஸ்லாமிய அறிவை தேடிய பயணம்.... இஸ்லாமிய கேள்வி பதில்கள் குர்ஆன் பற்றியது: 🔴திருக்குர்ஆன் ஓதத் துவங்கும் போது என்ன கூற வேண்டும்? அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்றும் (16:98) மற்றும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்றும் (96:1...) கூற வேண்டும். 🔴திருக்குர்ஆன் என்ற வார்த்தையின் பொருள் என்ன? ஓதுதல், ஓதப்பட்டவை, ஓதப்பட வேண்டியது என்பதாகும். 🔴 திருக்குர்ஆன் யாரிடமிருந்து இறங்கியது? அல்லாஹ்விடமிருந்து இறங்கியது 🔴திருக்குர்ஆன் யார் மூலம் இறங்கியது? ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) மூலம் இறங்கியது. 🔴 திருக்குர்ஆன் யாருக்கு இறங்கியது? ஹழ்ரத்முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது 🔴திருக்குர்ஆனைப் போன்று வாழ்ந்தவர்கள் யார்? நபி (ஸல்) அவர்கள் 🔴திருக்குர்ஆன் எந்த இடத்தில் இறங்கியது? ஹிரா என்னும் மலைக் குகையில் இறங்கியது 🔴திருக்குர்ஆன் முதல் (வஹீ) வசனம் எப்போது அருளப்பட்டது? கி.பி.610ம் ...
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹூ 🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இஸ்லாமிய அறிவை தேடிய பயணம்.... குர்ஆன் குறித்து நபிமொழிகள் கூறுவது 1. நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக்கூடியதாகும். அது ஏற்கப்படக்கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான். (முஸ்லீம் - இப்னு மஸ்வூத்(ரலி)) 2. குர்ஆனின் விஷயத்தில் தர்க்கம் புரிவது இறை மறுப்புச் செயலாகும் - அபூதாவூத் - அபூஹுரைரா(ரலி) 3. குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர். (புகாரி - உஸ்மான்(ரலி)) 4. இக்குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைகளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். (நூல்: தப்ரானி - அபூஹுரைரா(ரலி)) 5. பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் ...

அறிவோம் இஸ்லாம்..

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இஸ்லாமிய அறிவை தேடிய பயணம்.... இஸ்லாமிய கேள்வி பதில்கள்: 🌻1)ஸிஹாஹ்  ஸித்தஹ்” என்று கூறப்படும் ஹதீஸ் நூல்களின் பெயர் என்ன? A) 1) புஹாரி 2) முஸ்லீம் 3) அபூதாவுத் 4) திர்மிதி 5) நஸயி 6) இப்னுமாஜா 🌻2)அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? A) ‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி) 🌻3)அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்? A) (1) அபூபக்கர் (ரலி) (2) உமர் (ரலி) (3) உதுமான் (ரலி) (4) அலி (ரலி) (5) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (7) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) ஸயித் இப்னு ஜைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) (ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா) ...

இஸ்லாம் பற்றிய அடிப்படை கேள்விகள்..

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இஸ்லாமிய அறிவை தேடிய பயணம்.... இஸ்லாமிய கேள்வி பதில்கள்: 1. நாம் யார்?  💚நாம் முஸ்லிம்கள். 2. நம் மார்க்கம் எது? 💚 நம் மார்க்கம் இஸ்லாம். 3. இஸ்லாம் என்றால் என்ன?  💚அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது. 4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை?  💚இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து. அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ். 5. கலிமாவை கூறு 💚 லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் 6. கலிமாவின் அர்த்தத்தை கூறு.  💚வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். 7. ஒரு நாளைக்கு கடமையான தொழுகை எத்தனை? அவை யாவை?  💚ஒரு நாளைக்கு கடமையான தொழுகை ஐந்து. அவை சுப்ஹு, லுஹர், அஸர், மக்ரிப், இஷா 8. நோன்பு நோற்பது எப்போது கடமை?  💚ரமலான் மாதத்தின் 30 நாளும் நோன்பு நோற்பது கடமையாகும். 9. ஜகாத் என்றால் என்ன?  💚பணக்காரர்கள், ஏழைகளுக்கு தம் செல்வத்திலிருந்து 40ல் ஒரு பகுதியை கொடுப்பது ஜ...

இஸ்லாமிய கேள்வி பதில்கள்

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸 இஸ்லாமிய அறிவை தேடிய பயணம்.... இஸ்லாமிய கேள்வி பதில்கள்: 1)நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன? A) துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52) 2)பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது? A) யாகூப் (அலை) அவர்களின்  சந்ததியினர்களை 3)உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்? A) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28) 4)தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன? A) ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43) 5)குர்ஆனின் இதயம் என்று குறிப்பிடப்படுவது எது? A)சூரா யாஸின் 6)முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகள் என்பவர்கள் யார்? A)மக்காவிலிருந்து தம் சொத்து, உறவினர்கள் மற்றும் அனைத்தையும் துறந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள் முஹாஜிர்கள் ஆவார்கள். முஹாஜிர்களுக்கு உதவி செய்த மதீனாவாசிகள் அன்ஸாரிகள் ஆவார்கள் 7)முஸ்லிம்கள் முதன் ம...